Sunday, 8 May 2016

பூக்காரி

புதுமண பெண்ணுக்கு மல்லி,
ஆரம் போட்ட ஆக்களுக்கு அல்லி,
காசுமாலை அணிந்தவளுக்கு  கனகாம்பரம்,
சருகசேலை அணிந்தவளுக்கு சாமந்தி,
தங்க வலை அணிந்தவளுக்கு தாமரை,
என பார்த்து பார்த்து பூ தரும் என் பூக்காரியின் நகை,
புன்னகை :-)

காலம்

கடல் கடந்து இருக்கும் உன்னை காதல் செய்ய கடிகாரம்  சதி செய்கிறது....
என் இரவில் நீயும் உன் இரவில் நானும் கனவுகளில் வாழ்கிறோம்...
சுற்றி வரும் சூரியனை சற்று நேரம் நிற்க சொல்லிருகிறேன்..
நம் இரவுகளும் கனவுகளும்  சந்திக்கட்டும்...