Sunday, 20 November 2016

மழை

அழகு மழை இன்று என்னை ஆழ வைக்கும் மழை...
அற்புத மழை நன் உன்னை அனைத்து நடந்த பொது
இன்னும் இறுக்கிக் கொல்லுங்கள் என்று
ஆர்ப்பரித்த மழை...


இன்றும் அழகாய், மெதுவாய், அமைதியாய், ஆழமாய்
தூறிக்கொண்டே இருக்கிறது...
ஆனால் நீ இல்லாமல் இந்த ஆனந்தமான மழை எனக்கு
என்னைப்போல் அமைதியாய் அழுவது போல் உள்ளது....

Thursday, 6 October 2016

பயணம்

படபட காற்றில்  பட்டாம்பூச்சியாய் புறப்பட்டு பறக்கிறேன்...
பார்வை மாற்றி கொல்ல...
நமது அரைமணி நேர சந்திப்பிற்கு
ஆறு மணி பயணம்...
அரை நாள் தாங்கும் மனது...
பின் ஆர்பரிக்கும் மறுபடியும் காண...
மறுபடியும் ஓர் பயணம் என ஓடி கொண்டே இருப்பேன்.....

Thursday, 14 July 2016

முத்தம்

கலவி முடிந்து கட்டிலில் கலைந்து கிடக்கும்போது
நீ தரும் ஒற்றை முத்தத்தில்
மறுபடியும் இனைகிறது காதலும் காமமும்.



Wednesday, 29 June 2016

📖

படித்ததில்  பிடித்தது  -நீ 💞 !!!!

Saturday, 25 June 2016

உனது இதயம் என்றும் இமயம் தான். அதன் வலிமை நான் அறிவேன்.
என்றும் புன்கையுடன் இரு.
உனது புன்னகை சிலருக்கு உலகம் போல்..

Wednesday, 15 June 2016

அறிந்தோ அறியாமலோ இடரி விழும் ஒவ்வெரு முறையும் இனிப்பது காதல் !!!

Saturday, 11 June 2016

நீ !!!


தொலைத்துவிட்டோம் நம்மை,
தேடுகிறேன் என்னை,
கிடைப்பது  நீ !!!!
அழைப்பு மணியை அழுத்தும் ஒலியிலேயே
அறிந்துகொள்கிறேன் அன்றைய உன்னை...
தோற்பதும் சுகம் தான், அதை உன் மடியில்
தலை சாய்த்து சொல்லி மறப்பதெனின்....
இதற்கு எல்லாம் பேர் என்னவென்று அறியேன்
யாரேனும் கேட்டால் பூன்னகை  மட்டுமே பதில்..
அந்த புன்னகை உள் இருக்கும் மௌனம், நிறைவு
என அத்துணைக்கும் கரணம் நீ !!!!

Sunday, 8 May 2016

பூக்காரி

புதுமண பெண்ணுக்கு மல்லி,
ஆரம் போட்ட ஆக்களுக்கு அல்லி,
காசுமாலை அணிந்தவளுக்கு  கனகாம்பரம்,
சருகசேலை அணிந்தவளுக்கு சாமந்தி,
தங்க வலை அணிந்தவளுக்கு தாமரை,
என பார்த்து பார்த்து பூ தரும் என் பூக்காரியின் நகை,
புன்னகை :-)

காலம்

கடல் கடந்து இருக்கும் உன்னை காதல் செய்ய கடிகாரம்  சதி செய்கிறது....
என் இரவில் நீயும் உன் இரவில் நானும் கனவுகளில் வாழ்கிறோம்...
சுற்றி வரும் சூரியனை சற்று நேரம் நிற்க சொல்லிருகிறேன்..
நம் இரவுகளும் கனவுகளும்  சந்திக்கட்டும்...




Tuesday, 19 April 2016

மாயவன்...

எதார்த்த பேச்சால் என்னை பேச முடியாமல் செய்தவன்
தன் கதைகளால் என் கதையை எழுதவைக்கிறான்...
கண்கள் சந்திக்கவில்லை குரல்களால் சேர்ந்து இருக்கிறோம்...
பார்க்கும் போது  பதறாமல் இருக்க என்னை நானே பழுது பார்த்துக்கொண்டு இருக்கிறேன்....
எங்கு இருந்தோ திடீர் என வந்து எந்த தடயமும் இல்லாமல் என்னை தடம் புரட்டியவன்...
காதல் கொண்டு கரம் கோர்க்க முடியவில்லை என்றாலும் நட்பு கொண்டு மனம் சேர்ப்போம்....





Monday, 8 February 2016

????

ஆயிரம் கேள்விகள்  மனதில்,
எங்கு தொடங்க எங்கு முடிக்க,
எது  முன்னிலை எது  பின்னிலை,
யார் ஏந்த நிலை என  ஓவ்வொன்றாய் அர்த்தம் புரிந்து  பதில் தரும் மறு நொடி கேள்வி அனைத்தும் மாறி விட்டன ....
எந்த கேள்விக்கும் பதில் இல்லாத வாழ்க்கையில் உள்ளேன்....
பதில் தெரிந்தவனும் கல்லா எனும்  கேள்வியின் உள் உள்ளான்....

Sunday, 24 January 2016

மழலை

காலையும் மாலையும் இவன் முகம் பாராமல் துவங்குவதில்லை..
பாரதியின் பாடலுக்கு இப்போது அர்த்தம் அறிகிறேன்...
மழலை மொழி பேசி மனம் கவரும் மாயவன்...
தன் சிறு கையால்  சிதறிய அன்னம் கொண்டு என் பசி ஆற்றியவன்...
தன் குட்டிக்குறும்பு கொண்டு என்  குறை நிறைத்தவன்....
இவன் மீது கொண்ட காதல் அவன் பேலவே வேகமாக வளர்கிறது....

Thursday, 21 January 2016

மௌனக் கவிதைகள்

உன் புன்னகை ஒன்று போதும் என் புவி அழகாகிறது
கவிதை காதலை சொல்ல மட்டும் அல்ல
நட்பையும் தாய்மையும் தனிமையும் பள்ளி நாட்களையும் சொல்லத்தான் என புன்னகையால் என்னை குடிகொண்டாய்....


நீ உன்னை அறியாமல் தினம் என்னை புன்னகைக்கவைக்கிறாய்
கிடைக்காது என தெரிந்தும் கடை முன் நின்று ஏங்கும்  குழந்தை போல் நிற்கிறேன்.


நன்றிகள் பல சொல்லவேண்டும் என்னை மறுபடியும் இங்கு வழி நடத்தியதிற்கு.


நண்பர்களாக நடப்போமா ???

Tuesday, 19 January 2016

B-Cube

    Never dreamt I would be back here !!!
    Never expected this phase of life again its like a time again to concentrate to lot things...

    Its all about my self again like Rebirth :-P


    ONLY ME :-)


    Yes am gona Re Live my life back again...


    Back to Bangalore with a Bang !!!!

மறுபடியும் !!!

எதில் ஆரம்பிக்க ???


ஆரம்பம் என்று எண்ணிய   புள்ளி முற்று பெற்றது
நான் முற்று போட்ட புள்ளி முடியாமல் மறுபடியும் தொடர்கிறது.


இதோ இங்கு தொடர வந்துஉள்ளேன் ....
ஏனது  தேடலை


என்னையும் உன்னையும் நம்மையும்