Sunday, 2 June 2019

நீர்

அதிகம் நீராடுகிறேன், ஒரு நாளில் பல முறை...
மழை வந்து அதில் நனைந்து அழ காத்திருக்க முடியவில்லை
நீராடி அழுது தீர்க்கிறேன்...
நினைவுகள் காதல் ஊடல் கூடல் கனவுகள் ஏக்கம்
என ஏமாற்றத்தை நீரில் கரைத்து கொண்டு இருக்கிறேன்
நீர் பெரிதும் உதவுகிறது.. கேள்விகள் இல்லாமல் மௌனமாய்
அதன் கருத்தையும், பயத்தையும், கற்பனைகளையும்
என்மீது செலுத்தாமல் என்னை அணைத்துக்கொள்கிறது..
யாரும் என் நீராக முடியாது !!!  

No comments:

Post a Comment